கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சில தினங்களில் பருவ மழை தொடங்க உள்ளது. இந்நிலையில் பருவமழைக்கு முன்பாகவே மும்பையில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. மேலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மலை தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மும்பை, தானே மற்றும் ராய்காட் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது














