தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 40 கிலோமீட்டர் வேகத்தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம், சிக்கிம், பீகார் மாநிலங்களுக்கு கனமழைவாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.