ஹவுதி தாக்குதலால் செங்கடலில் கச்சா எண்ணெய் பரவுவதற்கான அபாயம் உருவாகியுள்ளது.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை அடிக்கடி தாக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி குழு, கடந்த 21-ந்தேதி சௌனியான் என்ற சரக்கு கப்பலை தாக்கியது. இந்த தாக்குதலில், சிறிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் டிரோன் படகு பயன்படுத்தப்பட்டது. இதனால் கப்பல் லேசான சேதாரம் ஏற்பட்டது. பிரான்ஸ் படைகள் கப்பலின் ஊழியர்களை காப்பாற்றியதால், கப்பல் கைவிடப்பட்டது. அதற்கிடையில், ஹமாஸ் அமைப்பினர் கப்பலை துப்பாக்கியால் தாக்கி சேதப்படுத்தினர். மேலும் கச்சா எண்ணெய் பேரல்கள் உள்ள டேங்கர்களை குண்டுகள் வைத்து தாக்கினர்.
இதன் விளைவாக, கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது. எனவே செங்கடலில் கச்சா எண்ணெய் பரவுவதற்கான அபாயம் உருவாகியுள்ளது. செங்கடல் வழியாக ஆண்டுக்கு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான சரக்கு போக்குவரத்து நடைபெறுவதால், உணவு தானியங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்ல இது முக்கிய வழித்தடமாக உள்ளது.