புதுவை அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்- முதலமைச்சர் ரங்கசாமி

January 5, 2023

புதுவை அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்துமாறு முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவை காமராஜர் மணிமண்டபத்தில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி, மனதையும் உடலையும் நலமுடன் வைப்பதற்கு யோக கலை  அவசியம். கோபம் உடல் நலத்தை கெடுக்கும். அமைதி […]

புதுவை அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்துமாறு முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுவை காமராஜர் மணிமண்டபத்தில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி, மனதையும் உடலையும் நலமுடன் வைப்பதற்கு யோக கலை  அவசியம். கோபம் உடல் நலத்தை கெடுக்கும். அமைதி உடலை காக்கும். அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது.

மேலும், மருத்துவமனை நோயாளிகளுக்கு யோக கலை பயிற்சி அளிக்க புதுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் விருப்பப்படும் மாணவர்களுக்கு யோகா கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu