கேதார்நாத் ஹெலிகாப்டர் சேவைகள் - ஐஆர்சிடிசி வெப்சைட்டில் டிக்கெட் விற்பனை

March 27, 2023

கேதார்நாத் தரிசனத்திற்கு ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்படுகின்றன. தற்போது, இந்த சேவைகளை இந்தியன் ரயில்வேயின் ஐஆர்சிடிசி வலைதளத்தில் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல், கேதார்நாத் தரிசனம் திறக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆன்லைன் டிக்கெட் விற்பனை துவக்கப்படுகிறது. முன்னதாக, ஹெலிகாப்டர் சேவைகளுக்கான சோதனைகள் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் ஆன்மீகப் பயணத்திற்கான விதிமுறைகளை டிஜிசிஏ வெளியிட்டுள்ளது. மேலும், 5 […]

கேதார்நாத் தரிசனத்திற்கு ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்படுகின்றன. தற்போது, இந்த சேவைகளை இந்தியன் ரயில்வேயின் ஐஆர்சிடிசி வலைதளத்தில் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல், கேதார்நாத் தரிசனம் திறக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆன்லைன் டிக்கெட் விற்பனை துவக்கப்படுகிறது. முன்னதாக, ஹெலிகாப்டர் சேவைகளுக்கான சோதனைகள் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் ஆன்மீகப் பயணத்திற்கான விதிமுறைகளை டிஜிசிஏ வெளியிட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளுக்கு, உத்தரகாண்ட் மாநிலத்தின் விமானப் போக்குவரத்து துறையுடன், ஐஆர்சிடிசி ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த சேவை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஐஆர்சிடிசி ஹெலியாத்ரா’ தளத்தில் டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலாத்துறை செயலியிலும் டிக்கெட் பதிவுகளை மேற்கொள்ளலாம். அத்துடன், 8394833833 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 27ஆம் தேதி முதல் பத்ரிநாத் தரிசனம் திறக்கப்பட உள்ளதால், ஐஆர்சிடிசி முன்பதிவு சேவை பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu