பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறு பேசியதாக சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இவர் தேனியில் ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது அவரது காரில் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததாக தேனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் மீது மொத்தம் ஆறு வழக்குகள் போடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்ட பின்னர் இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது