உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறைஅமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
யு.லலித், 1957ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் நவம்பர் மாதம் 9ம் தேதி பிறந்தார். அவர் சட்ட படிப்பை 1983ம் ஆண்டு முடித்தார். கடந்த 2004ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பொறுப்பு வகித்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி, நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற 2 வது நபர் ஆவார். மேலும், அவர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.














