தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக இரண்டு நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு இரண்டு நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப், பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் ஆகியோர் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்