'தூய்மை கங்கா' திட்டத்திற்காக அமைக்கப்பட்ட தேசிய ஆணையத்தின் 46 வது சந்திப்பில், கங்கை நதி பகுதிகளில் கழிவுநீர் கட்டமைப்புகளை ஏற்படுத்த 2700 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பிற்கு தேசிய தூய்மை கங்கா ஆணையத்தின் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார்.
இதுகுறித்து ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூய்மை கங்கா திட்டத்தின் பகுதியாக, 2700 கோடி மதிப்பில், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் மாநிலங்களில் 12 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பீஹார் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் காடு வளர்ப்பு திட்டத்திற்கு 42.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கங்கை நதியின் துணை நதியான அடி கங்காவின் சீரமைப்பு பணிகளுக்கு 653.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பகுதியாக, மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. உத்திரபிரதேசத்தில் பிராயக்ராஜ் - ல் 475.19 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.