பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வருகிற 24-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அசோக் கெலாட்டுக்கும், சசி தரூருக்கும் இடையே போட்டி என தகவல்.
மத்திய அரசின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லி பூ மஸ்கட் நகருக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது.
போபால் விஷவாயு வழக்கில் சீராய்வு மனு குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் கர்நாடகத்தில் 5 ஆயிரம் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தகவல்.