மத்திய அரசு வெல்லப்பாகு மீது 50 சதவீத ஏற்றுமதி வரியை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோலில் அதிக அளவிலான எத்தனால் கலப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 10 % எத்தனால் கலக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் 15% எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் எத்தனால் தேவை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. கரும்பிலிருந்து கிடைக்கும் துணைப் பொருளான வெல்லப்பாகு இதன் முக்கியமான பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை வியட்நாம், தென்கொரியா, நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிலிருந்து அதிகமாக ஏற்றுமதி செய்து வருகின்றனர். உள்நாட்டு வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக இதன் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு 50 சதவிகிதமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பாணையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் உள்நாட்டு ஆலைகளுக்கு எத்தனால் தயாரிக்க தேவையான அளவு வெல்லப்பாகு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது