மே 2023 ல் பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகம்

December 10, 2022

இந்தியாவில், வரும் மே மாதம் பிஎஸ்என்எல்-ன் 5ஜி சேவைகள் அறிமுகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி கட்டமைப்பு, அடுத்த 5 முதல் 7 மாதங்களுக்குள் 5ஜி ஆக மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி குறித்த செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிய பொழுது, பிஎஸ்என்எல் நிறுவனம், 4ஜி சேவைகளை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள 1.35 லட்சம் […]

இந்தியாவில், வரும் மே மாதம் பிஎஸ்என்எல்-ன் 5ஜி சேவைகள் அறிமுகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி கட்டமைப்பு, அடுத்த 5 முதல் 7 மாதங்களுக்குள் 5ஜி ஆக மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி குறித்த செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிய பொழுது, பிஎஸ்என்எல் நிறுவனம், 4ஜி சேவைகளை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள 1.35 லட்சம் செல்போன் டவர்கள், விரைவில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தப்படும் அஸ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். எனவே, மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி தொழில் நுட்பத்தை செயல்படுத்தும் அதே சமயத்தில், பிஎஸ்என்எல் நிறுவனமும் களத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu