தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் சீனா அனுப்பியது.
தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் கடந்த 24 மணி நேரத்தில் அனுப்பி வைத்திருப்பதாக தைவான் ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை காலை 6 மணியில் இருந்து நேற்று காலை 6 மணி வரையில் சீனாவின் 30 போர் விமானங்கள் தைவான் ஜலசந்தியின் நடுப்பகுதியைக் கடந்துள்ளன. இது அதிகாரப்பூர்வ எல்லையாக இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
சீனா அனுப்பிய போர் விமானங்களில் 'ஜே-16' ரக போர் விமானங்கள் 21-ம், 4 'எச்-6' குண்டுவீச்சு விமானங்களும், 2 முன் எச்சரிக்கை விமானங்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தைவான் கூறும்போது, தங்கள் நில அடிப்படையிலான ஏவுகணை அமைப்புகள் மற்றும் தங்கள் கடற்படை கப்பல்கள் மூலம் கண்காணித்ததாக தெரிவித்தது.