வரும் ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில், உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த நாடுகள் தங்களுக்குள்ள பொதுவான பிரச்சனைகள்,சவால்கள் மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றை கலந்துரையாட உள்ளன. இந்த மாநாட்டை மெய்நிகர் வழியில் இந்தியா தொகுத்து வழங்குகிறது. இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டில் 120 க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கின்றன. உக்ரைன் பிரச்சனை மற்றும் உலகளாவிய முறையில் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என கருதப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் பங்கேற்பு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.