சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய அளவில் கருந்துளை ஏற்பட்டுள்ளதை நாசா கண்டறிந்துள்ளது. இதன் விளைவாக, சூரியனின் வளிமண்டலத்தில் சூறாவளி புயல்கள் ஏற்பட்டுள்ளன. இவை, வரும் மார்ச் 23, 24 ஆம் தேதிகளில், தீவிர சூரிய புயலாக பூமியைத் தாக்கும் என்று நாசா எச்சரித்துள்ளது. இது தவிர, வரும் நாட்களில் வேறு சூரிய புயல்கள் ஏற்பட்டு, இந்த சூறாவளியுடன் இணையும் பட்சத்தில், விளைவுகள் மோசமானதாக இருக்கும் என கூறியுள்ளது.
பொதுவாக, இக்குநாக்ஸ் எனப்படும் ‘சம அளவு’ நாளை ஒட்டி, சூரிய புயல்கள் அதிக அளவில் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மார்ச் 21ஆம் தேதி சம அளவு நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில், நாசா தெரிவித்துள்ள தகவல்கள் படி, ‘ஜி’ ரக சூரிய புயல்கள் பூமியைத் தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், இந்த சூரிய புயலால், துருவப் பகுதிகளில் ஆரோராக்கள் தென்படும் என்று கூறப்பட்டுள்ளது.