கடந்த மார்ச் 23ஆம் தேதி, அதிதீவிர சூரிய புயல் பூமியை தாக்கியது. கடந்த 6 வருடங்களில் பூமியை தாக்கிய சூரிய புயல்களில் இதுவே மிகவும் மோசமானதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த சூரிய புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகின்றனர்.
பொதுவாக, சூரிய புயல்களின் போது துருவப் பகுதிகளில் ‘துருவ ஒளிகள்’ எனப்படும் ஆரோராக்கள் தென்படும். அதேபோன்று, கடந்த 23ஆம் தேதி, டென்மார்க் பகுதிகளில் சிவப்பு நிற ஒளி கீற்று தோன்றியது. முதலில், இதுவும் ஆரோரா என்று அறியப்பட்டது. ஆனால், தற்போது, இந்த ஒளிக்கீற்று ஆரோரா அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை SAR என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
பொதுவாக, வளிமண்டலத்தில் உள்ள மேலடுக்கில் ஆக்சிஜன் எரியூட்டப்படுவதால் SAR தோன்றும். ஆனால், இது பெரும்பாலும் மனிதர்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை. இது போன்ற SAR நிகழ்வு, சூரிய புயல் தாக்கிய போது ஏற்பட்டுள்ளதால், மார்ச் 23ஆம் தேதி நிகழ்ந்த SAR மனிதர்களின் கண்களுக்கு தெரியும்படி பதிவாகியுள்ளது. அதாவது, பூமியின் காந்தப்புலம் பாதிப்படைந்திருந்த நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது. இதன் மூலம், சூரிய புயலின் தாக்கம் அறியப்படுகிறது.