ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கொட்டா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து, வங்கதேசத்திற்கு மின்விநியோகத்தை தொடங்கியுள்ளதாக அதானி பவர் அறிவித்துள்ளது.
கொட்டாவில் உள்ள 800 MW அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து, 780 MW மின்சாரம் வங்கதேசத்திற்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கதேசத்தின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம், இருநாட்டு உறவுகள் வலுவடையும் என்று அதானி பவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ் வி காளியா தெரிவித்துள்ளார். மேலும், அனல் மின் நிலையம் தொடங்கப்பட்ட முதல் நாளே 100% FGD, SCR மற்றும் நீர் வெளியேற்றம் இல்லாத நிலையமாக இது இயங்கி வருவதாக கூறினார். விரைவில், அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் உற்பத்தி செயல்பாடுகளைத் துவக்க உள்ளதாக கூறினார்.