இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் மீது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கோவிட் பேரிடருக்குப் பிறகு இந்திய மக்கள் வியாபார இழப்புகளில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதை நம்புவதை விட, என்ன நடக்கிறது என்று நேரில் வந்து பார்த்து புரிந்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர் என்றார்.
மேலும் நிதி நிலைமைகள் மோசமாக இருந்தாலும் இந்திய பொருளாதாரம் உறுதி தன்மையுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு இந்தியா . இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்று கூறினார்.