பூமியின் வளி மண்டலத்தில் உருவான மர்ம சத்தங்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.
பூமியின் அடுக்கு மண்டலத்தின் ஒலிகளை பதிவு செய்ய ராட்சத பலூன்கள் 70 ஆயிரம் அடி உயரத்துக்கு அனுப்பப்பட்டன. ஸ்ட்ரா டோஸ்பியர் என்பது பூமியின் வளி மண்டலத்தின் 2-வது அடுக்கு ஆகும். இந்த அடுக்கு மண்டலத்தில் ஒலிகளை பதிவு செய்யப்பட பலூனில் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த பலூன்கள் பூமியின் அடுக்கு மண்டலத்துக்கு சென்று அங்கு தோன்றும் ஒலிகளை பதிவு செய்தது. அந்த ஒலிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் மர்மமான சத்தங்கள் பதிவாகியுள்ளது. மேலும் அங்கு சில முறை மர்மமான சிக்னல்கள் ஏற்பட்டன. ஆனால் இவற்றின் ஆதாரம் குறித்து தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.