ஜம்முவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நான்கு முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மலைப்பகுதி மாவட்டங்களான தோடா மற்றும் கிஷ்த்வாரில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இந்த நிலையில் இன்று காலை அப்பகுதிகளில் மீண்டும் அடுத்தடுத்து நான்கு முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8.29 மணியளவில் கிஷ்த்வாரில் 3.3 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தோடாவில் 7.56 மணியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இவை இரண்டும் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக நிலஅதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. பின்னர் ரியாசி மாவட்டம் கிழக்கு கத்ராவில் இருந்து 74 கி.மீட்டர் தொலைவில் 2.8 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.