தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ் கிருஷ்ணன் திடீரென பதவி விலகி உள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக, வங்கித் துறையில் தேர்ந்த அனுபவம் கொண்ட எஸ் கிருஷ்ணன், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரது பதவி விலகல், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் இயக்குனர்கள் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மத்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனைகள் கிடைக்கப்படும் வரை, அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கார் ஓட்டுநர் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக 9000 கோடி ரூபாய் அனுப்பிய விவகாரம் தொடர்பாகவே அவர் பதவி விலகி இருக்கலாம் என கருதப்படுகிறது.