இந்த ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கட்டலின் கரிக்கோ மற்றும் ட்ரு வைஸ்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நோபல் அசெம்பிளி என்னும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது, இந்த இரு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் மனிதர்களின் மரபணு கூறுகள் அவர்களுடைய எதிர்ப்பு சக்தியில் ஆற்றும் பங்கினை கண்டறிய உதவியது. இதன் மூலம் கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்க பெரியதளவு உதவியாக இருந்தது என்றது. இந்த இருவரும் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள். உயிர் வேதியியல் துறையை சேர்ந்தவரான ஹங்கேறிய அமெரிக்க விஞ்ஞானி கட்டலின் கரிக்கோ அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். அமெரிக்க வேதியல் விஞ்ஞானியான ட்ரூ வைஸ் மேன் (64 வயது) மரபணு ஆராய்ச்சிக்கான பென் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.