கடந்த நவம்பர் 1ம் தேதி, டிங்கி என்று அறியப்படும் டிங்கினேஷ் விண்கல்லை நாசாவின் லூசி விண்கலம் கடந்து சென்றது. இதன் போது, விண்கல்லை பற்றிய பல்வேறு தகவல்களை சேகரித்து அனுப்பியுள்ளது. அதன்படி, டிங்கினேஷ் விண்கல்லுக்கு தனியாக அல்லது சொந்தமாக நிலவு ஒன்று உள்ளது என்பதை லூசி விண்கலம் கண்டறிந்துள்ளது.
நாசா, விண்கற்களை குறித்து ஆராய்வதற்காக லூசி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம், கடந்த நவம்பர் 1ம் தேதி, டிங்கி விண்கல்லை 480 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து சென்றது. அப்போது விண்கல்லை புகைப்படம் எடுத்த லூசி விண்கலம், இந்த விண்கல் வெறும் 790 மீட்டர் அளவுடையது என கண்டறிந்துள்ளது. மேலும், இந்த விண்கல்லை சுற்றி வரும் மிகச் சிறிய நிலவு ஒன்று உள்ளதை கண்டுபிடித்துள்ளது. இது, வெறும் 220 மீட்டர் அளவுடையதாகும். லூசி விண்கலம் தொடர்ந்து பல்வேறு விண் கற்களை ஆராய உள்ளது. இதன் கண்டுபிடிப்புகள் விண்வெளி துறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.