சபரிமலை சிறப்பு ரயிலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயிலுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க ஐந்து நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. தற்போது சபரிமலை சிறப்பு ரயில்களாகவும் இவை இயக்கப்பட உள்ளன.
சபரிமலை பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக இதை இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வியாழக்கிழமை தோறும் எழும்பூரில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு பகல் 2.15 மணிக்கு வந்தடையும். பின்னர் நெல்லையில் இருந்து 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11:15 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் 16,23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. மேலும் இது தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.