பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க தமிழகத்திற்கு மூன்று நாள் பயணமாக வருகிறார்.
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி மூன்று நாட்கள் வருகை புரிய உள்ளார். இதில் சென்னையில் கேலோ இந்திய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பின்னர் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் சென்று தரிசனம் செய்ய உள்ளார். நாளை சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வில் தமிழக கவர்னர், தமிழக முதலமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் பிரதமரின் வருகையை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை மற்றும் திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதற்காக 22000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.