மாலத்தீவில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில், இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சரான மூசா ஜமீரை நேரில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உகாண்டாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இந்த உரையாடல் வெளிப்படையாக நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. “மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை திருப்பி அழைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. மாலத்தீவு வளர்ச்சி திட்டங்களை விரைவாக முடிக்கவும் பேசப்பட்டது.” - இவ்வாறு எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.