மத்திய அரசு பாரத் அரிசி என்ற பெயரில் சில்லறை சந்தையில் ரூபாய் 29க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரிசியின் திடீர் விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களின் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு பாரத் அரிசி என்ற பெயரில் சில்லறை சந்தையில் ரூபாய் 29க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த அரிசி அடுத்த வாரம் முதல் கடைகளில் கிடைக்கும். மேலும் இணையவழியிலும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே பாரத் ஆட்டா என்ற பெயரில் கோதுமை மாவு மற்றும் பாரத் பருப்பு என்ற பெயரில் வெள்ளை கொண்டைக்கடலையும் மத்திய அரசு சில்லறை சந்தையில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.