காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முக்கிய தலைவர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவையில் 543 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் தீவிரமாக தேர்தலுக்காக பணியாற்றி வருகின்றனர். இதில் தற்போது காங்கிரஸ் கட்சிகளின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி முக்கிய தலைவர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார். அதில் பொதுமக்களிடமிருந்து நிதி பெறுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த வங்கி கணக்குகள், காங்கிரஸ் கட்சியின் கணக்கு, இளைஞர்கள் காங்கிரஸின் கணக்கு ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. ரூபாய் 210 கோடி வருமான வரி பாக்கிகாக வங்கி கணக்குகள்
முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.