அல் ஜசீரா செய்தி அலுவலகங்களை மூட இஸ்ரேல் அரசு உத்தரவு

May 6, 2024

இஸ்ரேலில் அல் ஜசீரா செய்தி நிறுவனம் செயல்பட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அல் ஜசீரா செய்தி நிறுவனம் கத்தார் அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இது உலகின் பல்வேறு நாடுகளில் அலுவலகம் அமைத்து செய்தி ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள அந்நிறுவன அலுவலகங்களை மூடுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இந்த நிறுவனம் விளங்குவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு வைத்துள்ளது. எனவே இந்த நிறுவனத்தை மூட மந்திரி சபையில் ஒருமனதாக தீர்மானம் […]

இஸ்ரேலில் அல் ஜசீரா செய்தி நிறுவனம் செயல்பட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

அல் ஜசீரா செய்தி நிறுவனம் கத்தார் அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இது உலகின் பல்வேறு நாடுகளில் அலுவலகம் அமைத்து செய்தி ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள அந்நிறுவன அலுவலகங்களை மூடுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இந்த நிறுவனம் விளங்குவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு வைத்துள்ளது. எனவே இந்த நிறுவனத்தை மூட மந்திரி சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அந்நிறுவன அலுவலகங்களில் இஸ்ரேல் அதிகாரிகள் சோதனை நடத்தி அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே போரை முடிவுக்கு கொண்டு வர கத்தார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu