பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆம் ஆண்டு வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று இரண்டாவது முறை பிரதமர் ஆனார். தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளார். இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் ஒன்றாம் தேதி உ.பி யில் வாக்குபதிவு நடைபெறுகிறது. இதில் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ள பிரதமர் மோடி மே 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முந்தைய நாள் வாரணாசியில் வாகன பேரணி நடத்த உள்ளார்