ஈரான் நாட்டில் வரும் ஜூன் 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்சி விமான விபத்தில் உயிரிழந்தார். ஈரான் அரசியல் அமைப்பு சட்ட விதிகளின்படி, அதிபர் உயிரிழந்த 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, வரும் ஜூன் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் நாடாளுமன்றத் தலைவர், நிர்வாகத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கூட்டாக இணைந்து தேதியை உறுதி செய்துள்ளனர். அதிபர் தேர்தலில் பங்கேற்பவர்கள் மே 30 முதல் ஜூன் 3ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் 12 முதல் 15 ஆம் தேதி வரை பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.