பீகாரில் வெப்ப அலையின் காரணமாக 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. மேலும் டெல்லி, உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் தாண்டி வருகிறது. மேலும் பீகாரின் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவிகள் வெப்ப அலையின் காரணமாக அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். இந்நிலையில் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக ஜூன் 8-ம் தேதி வரை பீகார் மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை பீகாரில் வெப்ப அலை காரணமாக 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை அடுத்து மக்கள் மதிய நேரத்தில் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பீகார் அரசு அறிவுறுத்தியுள்ளது