இந்திய பங்குச் சந்தையில் இன்று புதிய உச்சம் பதிவாகியுள்ளது. முதல் முறையாக 25000 புள்ளிகளைத் தாண்டி நிஃப்டி முன்னேறியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 126.21 புள்ளிகள் உயர்ந்து 81867.55 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 59.75 புள்ளிகள் உயர்ந்து 25010.9 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், அதானி ட்ரான்ஸ்மிஷன், மாருதி சுசுகி, அதானி கிரீன், எச்டிஎப்சி வங்கி, அதானி எண்டர்பிரைசஸ், ஜொமாட்டோ, ரிலையன்ஸ், அதானி பவர், டி சி எஸ் போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டாடா ஸ்டீல், வோடபோன், எஸ் வங்கி, சுஸ்லான் எனர்ஜி, ஐடிசி, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ் ஆகியவை சரிவடைந்துள்ளன.