இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகள் அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் ரூ.41,814 கோடி முதலீடு செய்துள்ளன. இதில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவை முக்கியமானவை. மியூச்சுவல் ஃபண்டுகள், அதானி போர்ட்ஸில் ரூ.13,024 கோடி, அம்புஜா சிமெண்ட்ஸில் ரூ.8,999 கோடி, ஏசிசியில் ரூ.7,668 கோடி முதலீடு செய்துள்ளன. பாசிவ் ஃபண்டுகள் மட்டும் ரூ.11,777 கோடி முதலீடு செய்துள்ளன. இதில் அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவற்றில் அதிக முதலீடு உள்ளது.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், செபி தலைவர் மாதவி புரி புக் மற்றும் அவரது கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிதியில் பங்குதாரர்களாக இருந்ததாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்த பரஸ்பர நிதி முதலீடு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.