இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் தபார் இரண்டு நாள் பயணமாக சுவீடன் சென்றுள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் தபார் போர்க்கப்பல் சுவீடனுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளது. இந்தியாவும் ஸ்வீடனும் பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி வருகின்றன. அதன் காரணமாக ஸ்வீடனின் கோதண்பார்க் நகருக்கு இந்த போர்க்கப்பல் சென்றடைந்துள்ளது.
இந்திய கடற்படையினர் மற்றும் சுவீடன் கடற்படையினர் இரு தரப்பு தொழில்முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இவர்களிடையே கடல் சார்ந்த உறவை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.