2014ல் மரகும்பி கிராமத்தில் நடந்த தாக்குதலுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடகாவில், 2014ம் ஆண்டு மரகும்பி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு ஏற்பட்ட தாக்குதலில் தொடர்புடைய 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த தீர்ப்பு அக்டோபர் 21ம் தேதி வழங்கப்பட்டது. மேலும், குற்றத்தில் ஈடுபட்ட சிறார்களை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்ப்பு விவரங்களை கேட்ட போது, ஆயுள் தண்டனை பெற்ற ஒருவரே அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.