தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை நாடாளுமன்றம் பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானம் எடுத்து அறிவித்துள்ளது.
கடந்த 3-ஆம் தேதி, அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய யூன் சுக் இயோல், பெரும் அதிர்வலைையை ஏற்படுத்தினார். இந்நிலையில், இது அவரது பதவி நீக்கத்துக்கான முக்கிய காரணமாக அமைந்தது. அதிபர், நாடாளுமன்றத்தையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதவி நீக்கத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி மற்றும் ஐந்து சிறிய கட்சிகள், யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைத்துள்ளன.