சீனாவின் சாங்சோவில் நடைபெறும் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களின் பங்கேற்பை சிறப்பாக ஆரம்பித்துள்ளனர்.
இந்த பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி ஒகமுரா மற்றும் கென்யா மிட்சுஹாஷி ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி துடிப்பாக விளையாடி 21-13, 21-9 என்ற செட்களில் மிக எளிதாக வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் முன்னேறியது. இந்த வெற்றியால் இந்திய அணிக்கு மீதமுள்ள போட்டிகளில் அதிக உற்சாகம் கிடைத்துள்ளது.