பிபிசி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், 2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளதாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது வெளியிட்டுள்ளது.
'இந்தியா: மோடி மீதான கேள்வி என்ற தலைப்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2002 குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து கூறப்பட்டிருந்தது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துக்கள் அதில் இடம்பெற்றிருந்ததால், அதன் சமூக ஊடக இணைப்புகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், இந்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாகம் யூடியூபில் வெளியிடப்படாமல், புதிய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, இந்த ஆவணப்படம் வெற்றுப் பிரச்சாரம் என்று வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், பிபிசி தரப்பிலிருந்து, விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே ஆவணப்படம் உருவாக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.