இன்று முதல் சென்செக்ஸ் பட்டியலில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் இடம்பெறுகிறது. விப்ரோ நிறுவனத்திற்கு மாற்றாக இது பட்டியலில் இணைக்கப்படுகிறது. அதன்படி, விப்ரோ நிறுவனம் சென்செக்ஸ் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.
சென்செக்ஸ் பட்டியலில் 30 நிறுவனங்கள் பிரதானமாக இடம்பெறுகின்றன. அதில், அதானி போர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளதன் மூலம், 259 மில்லியன் டாலர்கள் மதிப்பில் வரவுகள் இருக்கலாம் என நுவாமா நிறுவனம் கணித்துள்ளது. அதே வேளையில், விப்ரோ நிறுவனம் வெளியேறியதன் மூலம், 170 மில்லியன் டாலர்கள் வெளியேறலாம் என கணித்துள்ளது. மேலும், சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏர்டெல், இன்ஃபோசிஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் மற்றும் இன்டஸ் இன்ட் வங்கி ஆகிய 7 நிறுவனங்களின் பங்குகள் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்யும் என கணித்துள்ளது.