சர்வதேச அரசியல் மாற்றங்களை முன்னிட்டு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கம், இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட பாரிய காற்றாலை மின் திட்டத்திற்கான அங்கீகாரத்தை மறுபரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளது.
மன்னார் மற்றும் பூனேரியில் 484 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 440 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தத் திட்டம், மின்சாரக் கட்டணம் மற்றும் இலங்கையின் எரிசக்தி சுதந்திரத்தில் அதன் சாத்தியமான தாக்கம் ஆகியவற்றின் காரணமாக பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே, தனது பிரச்சாரத்தின் போது, நாட்டின் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அவர் கருதும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக திஸாநாயக்க உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வரும் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.