பிரதமர் மோடி போலந்திலிருந்து உக்ரைனுக்கு ரயிலில் பயணம் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடி ஆகஸ்ட் 23ஆம் தேதி உக்ரைனுக்கு சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசவிருக்கிறார். அவர் அங்கு உக்ரைன் போருக்கு தீர்வு எட்டுவது குறித்து விவாதிக்க உள்ளார். அவர் உக்ரைனுக்கு ரயிலில் பயணம் செய்ய உள்ளார். தற்போது அவர் போலந்தில் இருக்கிறார். அங்கிருந்து உக்ரைனுக்கு தலைநகர் கீவுக்கு ரயில் போர்ஸ் ஒன் எனும் சொகுசு ரயிலில் அவர் பயணிக்க உள்ளார். இது சர்வதேச தரத்துடன் இயக்கப்படும் ரயிலாகும். கீவ் நகரில் சுமார் 7 மணி நேரம் பிரதமர் மோடி இருக்கும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக கிட்டத்தட்ட 20 மணி நேரம் ரயிலில் இரவு முழுக்க பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.