அதானி குழுமத்தின் பங்குகளுக்கு எதிராக பெறப்பட்ட அனைத்து கடன்களும், இம்மாத இறுதிக்குள் திருப்பி செலுத்தப்படும் என்று கௌதம் அதானி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, தொடர்ந்து பல கடன்களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று, 500 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் தொகை அதானி குழுமத்தால் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, அதானி குழுமத்தின் கடன்கள் அனைத்தும் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில், அனைத்து கடன்களும் திருப்பி செலுத்தப்பட்டதை கௌதம் அதானி உறுதி செய்துள்ளார். மேலும், இதன் மூலம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதானி குழுமம் மீண்டும் தக்க வைக்கும் என்று கருதப்படுகிறது.