ஜம்மு காஷ்மீரில் நேற்று 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு 9.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தின் சேத விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.