கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், ஆக்சிஸ் வங்கி 10% லாப உயர்வை பதிவு செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, ஆக்சிஸ் வங்கியின் நிகர லாபம் 5863 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், வங்கியின் மொத்த வருவாய் 31660 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த வருவாய் மட்டும் 19% உயர்ந்து, 12315 கோடி ரூபாய் அளவில் பதிவாகியுள்ளது. நிகழும் காலாண்டு பண்டிகை காலம் என்பதால், வங்கியின் செயல்பாடுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என நம்புவதாக, ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கையின் விளைவாக, இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.