காசாவில் புதிய ஆட்சி தேவை - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

November 20, 2023

போருக்கு பின் காசாவில் ஒரு சிவில் அரசாங்கம் அமைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு விருப்பம் தெரிவித்துள்ளார். காசாவில் போருக்குப்பின் இஸ்ரேல் ராணுவம் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேல் காசாவை தற்காலிகமாக ஆக்கிரமிப்பு செய்யும் என்ற ஊகம் எழுந்துள்ளது. காசா சட்டியில் தற்போது இஸ்ரேல் ராணுவம் தங்கள் தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் ஹமாஸ் படையினர் செயல்படக்கூடிய இடங்கள் குறைந்து வருகிறது. […]

போருக்கு பின் காசாவில் ஒரு சிவில் அரசாங்கம் அமைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு விருப்பம் தெரிவித்துள்ளார். காசாவில் போருக்குப்பின் இஸ்ரேல் ராணுவம் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேல் காசாவை தற்காலிகமாக ஆக்கிரமிப்பு செய்யும் என்ற ஊகம் எழுந்துள்ளது.
காசா சட்டியில் தற்போது இஸ்ரேல் ராணுவம் தங்கள் தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் ஹமாஸ் படையினர் செயல்படக்கூடிய இடங்கள் குறைந்து வருகிறது. இதனை அடுத்து தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடரும் என்று கூறப்படுகிறது. இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் இந்த போரில் பலியாகி உள்ளனர். போருக்கு பின் காசாவில் ஹமாஸ் மற்றும் பயங்கரவாதம் இருக்கக் கூடாது எனவும் அங்கு ஒரு சிவில் அரசாங்கம் அமைய வேண்டும் எனவும் இஸ்ரேல் பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும் அந்த அரசை யார் ஏற்று நடத்த வேண்டும் என்று அவர் கூறவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu