டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

December 27, 2023

டெல்லியில் உள்ள சாணக்கியாபூரி பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று மாலை 5 மணி அளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக இஸ்ரேல் தூதரக செய்தி தொடர்பாளர் குய் நிர் தெரிவித்துள்ளார். மேலும், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறியுள்ளார். மும்பையில், மத்திய ரிசர்வ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐ சி […]

டெல்லியில் உள்ள சாணக்கியாபூரி பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை 5 மணி அளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக இஸ்ரேல் தூதரக செய்தி தொடர்பாளர் குய் நிர் தெரிவித்துள்ளார். மேலும், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறியுள்ளார். மும்பையில், மத்திய ரிசர்வ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்றவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தூதரக அதிகாரிக்கு அனுப்பப்படுவதாக இருந்த கடிதம் ஒன்றை, காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu