பிரேசிலில் எக்ஸ் சமூக ஊடக தளத்திற்கு தடை விதித்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரேசில் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி அலெக்சாண்டிரே டிமோரஸ், 'எக்ஸ்' தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்ட கணக்குகளை எலான் மஸ்க் மீண்டும் செயல்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுப்பினார். இதையடுத்து பிரேசிலில் பேச்சு சுதந்திரம் முடக்கப்படுவதாகவும், எக்ஸ் அலுவலகத்தை மூடி, ஊழியர்களை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் 'எக்ஸ்' தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி அலெக்சாண்டிரே டிமோரஸ், 'எக்ஸ்' தளத்திற்கு 24 மணி நேரத்தில் சட்ட விவகார பிரதிநிதியை நியமிக்க உத்தரவிட்டார்; இல்லையெனில், தளம் முடக்கப்படும் என எச்சரித்தார். எலான் மஸ்க் இந்த உத்தரவை ஏற்க முடியாது என தெரிவித்தார். இதனால், 'எக்ஸ்' தளத்திற்கு தற்காலிக தடை விதிக்க பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 'எக்ஸ்' தளத்தை முடக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் 'எக்ஸ்' செயலியை தடுக்கும் தொழில்நுட்ப தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், VPN மூலம் 'எக்ஸ்' பயன்பாட்டுக்கு 8,874 டாலர் (சுமார் ₹7,44,000) அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.