இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக, தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண், 2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக, 18,700 புள்ளிகளை தாண்டி உள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், நிஃப்டி குறியீட்டு எண் 127.4 புள்ளிகள் உயர்ந்து 18726.4 ஆக நிலை கொண்டுள்ளது. அதே வேளையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 350.08 புள்ளிகள் உயர்ந்து 63142.96 புள்ளிகள் ஆக நிலை பெற்றுள்ளது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, பிரிட்டானியா, டாடா கன்ஸ்யூமர், பிபிசிஎல், நெஸ்ட்லே, எச்டிஎப்சி, ஜே எஸ் டபிள்யூ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், சிப்லா, கோட்டக் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா, மாருதி சுசுகி, அதானி போர்ட்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.