குரோம்பேட்டை எம்.ஐ.டி வடிவமைத்த ட்ரோன்

November 18, 2023

சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி மேம்படுத்த வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம் உருவாக்கிய 500 ட்ரோன்கள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்த தொடங்கியுள்ளது.இந்திய ராணுவம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளை குரோம் பேட்டையில் அமைந்துள்ள எம். ஐ.டி. நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கிய ட்ரோன் மூலம் கண்காணித்து வருகிறது. எல்லை கண்காணிப்பு நிலையங்களில் மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை அனுப்ப இந்த ட்ரோன் உதவும் என மத்திய […]

சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி மேம்படுத்த வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம் உருவாக்கிய 500 ட்ரோன்கள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்த தொடங்கியுள்ளது.இந்திய ராணுவம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளை குரோம் பேட்டையில் அமைந்துள்ள எம். ஐ.டி. நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கிய ட்ரோன் மூலம் கண்காணித்து வருகிறது.
எல்லை கண்காணிப்பு நிலையங்களில் மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை அனுப்ப இந்த ட்ரோன் உதவும் என மத்திய மந்திரி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தா ஆளில்லா விமானங்கள் கடும் பனி, மழை மற்றும் வேகமான காற்று வீசும்போது கூட பயன்படுத்த முடியும். ஒரு கிலோமீட்டர் உயரம் வரை சென்று பறக்கக்கூடிய இவை ஒரு சுற்றில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை இயக்கப்படும். மேலும் இது சுமார் 100 கிலோ எடை கொண்டது. இவை 15 முதல் 20 கிலோ மருந்துகள், உணவு பொருட்கள் போன்றவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை.மேலும் இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் அவசர அறுவை சிகிச்சைக்காகவும், உடல் உறுப்புகள் மற்றும் அரியவகை இரத்தம் மற்றும் குருதி திரவவிழையம் விரைவாக எடுத்துச் செல்லவும் இந்த மையம் தற்போது ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu